2016-09-03 17:31:00

மத்தியதரைக் கடலில் புலம்பெயர்ந்தவர் இறப்பு 2016ல் அதிகரிப்பு


செப்.03,2016. மத்திய தரைக் கடலின் மத்திய பகுதி வழியாக, வட ஆப்ரிக்காவிலிருந்து இத்தாலிக்கு வருகின்ற வழியில் இறக்கும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, ஐ.நா. புலம்பெயர்ந்தவர் அமைப்பு கூறியது.

துருக்கி-கிரேக்கம் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழையும் இம்மக்களின் இறப்பு எண்ணிக்கை குறைந்திருந்தாலும், வட ஆப்ரிக்காவிலிருந்து இத்தாலிக்கு வருகின்ற இம்மக்களின் இறப்பு எண்ணிக்கை, 2016ம் ஆண்டில் அதிகரித்துள்ளதாக, அந்த ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.

லிபியாவிலிருந்து இத்தாலிக்கு வருகின்ற வழியில் இறக்கும் இம்மக்களின் எண்ணிக்கை, துருக்கியிலிருந்து கிரேக்கம் செல்லும் வழியில் இறப்பவர்களைவிட பத்து மடங்கு அதிகம் எனவும், அந்த அமைப்பு கூறியது.  

2016ம் ஆண்டில், வட ஆப்ரிக்காவிலிருந்து இத்தாலிக்கு வருகின்ற வழியில், 42 பேருக்கு ஒருவர் வீதம் இறப்பதாகவும், இவ்வெண்ணிக்கை, கடந்த ஆண்டில், 52 பேருக்கு ஒருவர் வீதம் இருந்ததாகவும், ஐ.நா. அதிகாரி வில்லியம் ஸ்பின்ட்லர் பத்திரிகையாளரிடம் கூறினார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.