2016-09-03 16:59:00

அன்னை தெரேசா பற்றிய கருத்தரங்கிற்கு திருத்தந்தை செய்தி


செப்.03,2016. அன்னை தெரேசா அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வு, கிறிஸ்துவை மையமாக வைத்து வாழ்வதற்கு நமக்கு உதவுவதாக என்று, அன்னை தெரேசா பற்றிய ஒரு கருத்தரங்கிற்கு அனுப்பிய தந்திச் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“அன்னை தெரேசா: ஆசியாவுக்கும், உலகுக்கும் இரக்கம்” என்ற தலைப்பில், ஆசியச் செய்தி நிறுவனம், இவ்வெள்ளியன்று, உரோம் உர்பானியானம் பாப்பிறை பல்கலைகழகத்தில் நடத்திய கருத்தரங்கிற்கு, திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பிய செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்துவை நம் வாழ்வில் மையமாக வைப்பதற்கும், இரக்கத்தின் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவதில், சுதந்திரமாக நற்செய்தியை வாழ்வதற்கும், உண்மையின் ஒளியால் தூண்டப்பட்டு, நல்லதோர் உலகை அமைப்பவர்களாக மாறுவதற்கும், அன்னை தெரேசா அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வு, நமக்கு உதவுவதாக என்றும், அச்செய்தி கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.