2016-09-01 16:46:00

தன்னார்வலப் பணியாளர்கள் யூபிலி விழா செப்.2-4


செப்.01,2016. இரக்கத்தின் மற்றும் தன்னார்வலப் பணியாளர்களின் யூபிலி விழா, செப்டம்பர் 2, இவ்வெள்ளி முதல், செப்டம்பர் 4 ஞாயிறு வரை நடைபெறுகின்றது.

இவ்வெள்ளி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை, திருநற்கருணை ஆராதனையும், ஒப்புரவு அருளடையாளமும் நடைபெறும். அதன்பின்னர் அவர்கள் புனிதக் கதவுக்குத் திருப்பவனியாகச் செல்வார்கள்.

செப்டம்பர் 03, சனிக்கிழமையன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், திருத்தந்தை இரக்கத்தின் மற்றும் தன்னார்வலப் பணியாளர்களைச் சந்திப்பார்.

செப்டம்பர் 04, ஞாயிறன்று, அன்னை தெரேசா அவர்கள் புனிதராக அறிவிக்கப்படும் திருப்பலியோடு, இந்த யூபிலி நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.