2016-08-26 14:12:00

இது இரக்கத்தின் காலம் : தனக்கு தெரியாததில் தலையிடுவது ஆபத்து


மந்தையிலிருந்து  பிரிந்து போன ஓர் ஆட்டுக் குட்டியை ஓநாய் துரத்தியது. தப்பிக்க முடியாது என்று தீர்மானமாகத் தெரிந்ததும், ஆட்டுக்குட்டி, ஓநாயைப் பார்த்து, “நான் இனித் தப்ப முடியாது என்பது எனக்குத் தெரியும். நான் இன்னும் சிறிது நேரம்தான் வாழப் போகிறேன். இறப்பதற்கு முன் என்னை மகிழ்ச்சியாக சிறிது நேரம் இருக்க அனுமதிப்பாயா?, சிறிது நேரம் பாட்டுப் பாடேன் நான் ஆடுகிறேன்,” என்று கேட்டது. ஓநாயும் அதற்குச் சம்மதித்து, தன் குரலை உயர்த்தி ஊளையிட்டுப் பாடத் துவங்கியது. ஆட்டுக் குட்டியும் நடனமாட ஆரம்பித்தது. ஆனால், சில நிமிடங்களுக்குள்ளேயே ஓநாயின் சப்தம் கேட்டு, ஆட்டு மந்தையை மேய்ப்பவர்கள் ஓடி வந்து ஓநாயை விரட்டி அடித்தனர். ஓடிக் கொண்டே ஓநாயும், “எனக்கு இது தேவைதான். வேட்டையாடுவதுதானே என்னுடைய தொழில். அதை விடுத்து ஊளையிட்டுப் பாடியது தவறுதான்!’ என்று சொல்லி வருந்தியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.