2016-08-25 14:21:00

நேர்காணல் – கொல்கத்தா புனித சேவியர் தன்னாட்சி கல்லூரி


ஆக.25,2016. கொல்கத்தா புனித சேவியர் தன்னாட்சி கல்லூரி, 156 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. இயேசு சபையினர் நடத்தும் இந்தப் புகழ்மிக்க கல்லூரியை, பல்கலைக்கழகமாக உயர்த்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இரவீந்திரநாத் தாகூர் உட்பட பல உலகப் புகழ் மாமனிதர்கள் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள். இக்கல்லூரியின் முதல்வராக, 2009ம் ஆண்டிலிருந்து பணியாற்றிவரும் இயேசு சபை அருள்பணி பெலிக்ஸ் ராஜ் அவர்களிடம், இக்கல்லூரி பற்றி தொலைபேசியில் கேட்டோம். அருள்பணி பெலிக்ஸ் ராஜ் அவர்கள், மேற்கு வங்க அரசின் பங்கா பிபூசன் உட்பட பல விருதுகளைப் பெற்றிருப்பவர். மேற்கு வங்காள அரசின் உயர்மட்ட கல்விக் குழுவில் இவரும் ஓர் உறுப்பினர். இக்குழுவிற்கு, இயேசு சபை அருள்பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.    








All the contents on this site are copyrighted ©.