2016-08-24 17:00:00

மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் வீரர்களுக்கு வாழ்த்து


ஆக.24,2016. பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜெனய்ரோ நகரில், வருகிற செப்டம்பர் 7 முதல் 18 வரை நடைபெறவிருக்கும், மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கும், உலக மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் அமைப்புக்கும், தனது வாழ்த்தையும் இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

2013ம் ஆண்டில் உலக இளையோர் நாளைச் சிறப்பிக்க ரியோ சென்ற திருத்தந்தை, மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் கொடியை ஆசீர்வதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இன்னும், நன்னெறியியல் கல்வி ஆய்வுக்கான, இத்தாலிய இறையியல் கழகம் தொடங்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கும் வாழ்த்துத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நன்னெறியியல் இறையியலாளர்கள், இந்த முக்கியத்துவம் நிறைந்த நன்னெறிகளைப் போதிக்கும்போது, இரக்கத்தின் அப்பத்தை உடைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இப்பிரதிநிதிகள், இப்பொது மறைக்கல்வியுரையில் கலந்துகொண்டனர்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.