2016-08-20 15:40:00

சமூகத்தை மாற்றியமைத்த இரு கத்தோலிக்கருக்கு விருது


ஆக.20,2016. பங்களாதேஷ் கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில், முதல்முறையாக. இரு பொதுநிலை விசுவாசிகளுக்கு, "Pro Ecclesia et Pontifice"  என்ற திருத்தந்தையின் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பங்களாதேஷ் சமுதாயத்தை மாற்றியமைப்பதற்குத் தங்களை அர்ப்பணித்திருக்கும் டாக்டர் Benedict Alo D'Rozario, மறைந்த நீதிபதி Promod Mankin அவர்களின் துணைவியார் ஆகிய இருவருக்கும் இப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.

திருஅவைக்கும், திருத்தந்தைக்கும் சிறப்பான பணியாற்றியதற்காக வழங்கப்படும் இவ்விருதை, பங்களாதேஷ் திருப்பீடத் தூதர் George Kocherry அவர்கள் வழங்கினார்.

டாக்டர் Benedict Alo D'Rozario அவர்கள், காரித்தாஸ் அமைப்பின் வரலாற்று சிறப்புமிக்க தலைவராவார். மேலும், மறைந்த நீதிபதி Promod Mankin அவர்கள், பல ஆண்டுகளாக, சிறுபான்மையினர் சார்பாக அரசியலில் பணியாற்றியவர்.

பங்களாதேஷ் ஆயர் பேரவை தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், 8 ஆயர்களும், 2 பேராயர்களும், 60 கத்தோலிக்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.