2016-08-13 16:17:00

ஏழைகளுக்கு உதவும் முயற்சிக்கு திருத்தந்தை ஆதரவு


ஆக.13,2016. அர்ஜென்டீனா நாட்டில், ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவுவதற்கென நடைபெறவுள்ள நடவடிக்கைக்கு, தனது ஆதரவை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வருகிற செப்டம்பர் 10,11 ஆகிய தேதிகளில் இடம்பெறவுள்ள இந்நடவடிக்கையில், அர்ஜென்டீனா சமூகத்தில் மிகவும் வாய்ப்பிழந்த மக்களுக்கு உதவுவதற்கென, நிதி திரட்டப்படும்.

“Más por Menos” என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள இம்முயற்சிக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, இதில் ஈடுபட்டுள்ள எல்லாரும், உதவி தேவைப்படும் சகோதர, சகோதரிகளுக்கு உதவிக்கரம் நீட்டவும், அம்மக்கள், கடவுளின் அன்பை அதிகமாக உணர்ந்து, அவரை நெருங்கிச் செல்லவும் உதவுமாறு கேட்டுள்ளார்.

திருத்தந்தையின் இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.