2016-08-11 15:25:00

முன்னறிவிப்பின்றி துறவு இல்லங்களுக்குச் சென்ற திருத்தந்தை


ஆக.11,2016. ஆகஸ்ட் 9, இச்செவ்வாயன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியில் உள்ள இரு துறவு இல்லங்களுக்குச் சென்று, அங்கு வாழும் அருள் சகோதரர்களைச் சந்தித்தார்.

லக்கீலா (L’Aquila) பகுதியில், கார்ஸோலி எனுமிடத்தில் அமைந்துள்ள புனித தோமினிக் துறவு சபை அருள் சகோதரிகளையும், ரியேத்தி (Rieti) பகுதியில் போர்கோ சான் பியெத்ரோ எனுமிடத்தில் புனித பிலிப்பா மடத்தில் வாழும் பிரான்சிஸ்கன் அருள் சகோதரிகளையும் சந்தித்தார்.

ரியேத்தியின் ஆயர் தோமெனிக்கோ பொம்பீலி (Domenico Pompili) அவர்கள், இச்சந்திப்பில் திருத்தந்தையுடன் கலந்துகொண்டார்.

இவ்வாண்டு சனவரி 4ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ரியேத்தியின் கிரேச்சோ (Greccio) திருத்தலத்தில், புனித பிரான்சிஸ் அமைத்ததாகச் சொல்லப்படும் முதல் கிறிஸ்து பிறப்பு காட்சியை காணச் சென்றது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.