2016-08-11 16:24:00

தென் கொரியா சமய அடக்குமுறையின் 150ம் ஆண்டு நிறைவு


ஆக.11,2016. 1886ம் ஆண்டு தென் கொரியாவில் நிகழ்ந்த Byeongin சமய அடக்குமுறையின் 150ம் ஆண்டு நிறைவைக் கடைபிடிக்க Seoul உயர் மறைமாவட்டம் தீர்மானித்துள்ளது என்று UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆகஸ்ட் 24ம் தேதி முதல் அக்டோபர் 30ம் தேதி முடிய, Seoul உயர் மறைமாவட்டத்தின் Myeong-dong பேராலயத்திலும், அதன் சுற்றுப்புறப் பகுதியிலும் "மறைசாட்சியமும் இரக்கமும்" என்ற மையக்கருத்துடன் பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"மறைசாட்சியமும் இரக்கமும்" என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள 60 ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி இந்நிகழ்வுகளை துவக்கி வைக்கும் என்றும், இதைத் தொடர்ந்து, இசை நாடகங்கள், திரைப்பட விழா ஆகியவையும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1866ம் ஆண்டு நடைபெற்ற சமய அடக்குமுறையில், 9000த்திற்கும் அதிகமான கத்தோலிக்கர், அதாவது, அப்போதைய கத்தோலிக்க எண்ணிக்கையில் பாதிக்கு மேற்பட்டோர், கொல்லப்பட்டனர் என்று UCAN செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.