ஆக.09,2016. அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், புனிதராக அறிவிக்கப்படவிருப்பதை முன்னிட்டு, சிறப்பு தபால்தலை ஒன்றை வெளியிடவுள்ளது வத்திக்கான்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற செப்டம்பர் 4ம் தேதி அன்னை தெரேசா அவர்களை, புனிதராக அறிவிக்கவுள்ளதை முன்னிட்டு, அதற்கு இரு தினங்களுக்கு முன்னதாக, செப்டம்பர் 2ம் தேதி, இச்சிறப்பு தபால்தலையை வெளியிடத் திட்டமிட்டுள்ளது வத்திக்கான் தபால்துறை.
ஒரு தாளில், பத்து தபால்தலைகள் என, ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் தாள்களை அச்சடித்து விநியோகிப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் வத்திக்கான் தபால்துறை மேலும் கூறியது.
சுருங்கிய, அதேநேரம், சுடர்விடும் முகத்தைக்கொண்ட அன்னை தெரேசா அவர்கள் உருவம் பதித்த இத்தபால்தலை, 95 சென்ட் விலையுடையது.
ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |