2016-08-06 17:11:00

போலந்து நாட்டின் புதிய தூதர் - பேராயர் பென்னாக்கியோ


ஆக.06,2016. இதுநாள்வரை இந்தியா மற்றும் நேபாளத்தின் திருப்பீடத் தூதராக பணியாற்றி வந்த பேராயர் சால்வத்தோரே பென்னாக்கியோ (Salvatore Pennacchio) அவர்களை, போலந்தின் திருப்பீடத் தூதராக நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் மரானோ என்னுமிடத்தில் 1952ம் ஆண்டு பிறந்த பேராயர் பென்னாக்கியோ அவர்கள், ருவாண்டா, தாய்லாந்து, சிங்கப்பூர், கம்போடியா, மியான்மார், லாவோஸ், மலேசியா, புருனே ஆகிய இடங்களில் திருப்பீடத் தூதராகப் பணியாற்றியபின், 2010ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி, இந்தியாவிற்கான திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தியா மற்றும் நேபாளத்தின் திருப்பீடத் தூதராகப் பணியாற்றியுள்ள பேராயர் பென்னாக்கியோ அவர்களை, இச்சனிக்கிழமையன்று போலந்தின் திருப்பீடத் தூதராக நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.