2016-07-22 14:55:00

அன்னை தெரேசா அவர்கள் பற்றிய நூலுக்கு அணிந்துரை


ஜூலை,22,2016. “Amiamo chi non è amato” அதாவது, அன்புகூரப்படாதவர்களை அன்புகூர்வோம் என்ற தலைப்பில், அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் பற்றிய நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை எழுதியுள்ள இந்த அணிந்துரை “Il Corriere della Sera” என்ற இத்தாலிய தினத்தாளில் இவ்வெள்ளியன்று பிரசுரமானது.

அன்னை தெரேசா அவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு, மத்தேயு நற்செய்தி 25ம் பிரிவை வாசித்தாலே போதுமானது என்றும், அன்னை தெரேசா அவர்கள், இடைவிடாத செபம், பிறரன்பு மற்றும் இரக்கப் பணிகளுக்கு அழைப்பு விடுக்கிறார் என்றும் இந்த அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

குடும்பத்தில் அன்னையரின் முக்கியத்துவம் பற்றியும் அன்னை தெரேசா அவர்கள் வலியுறுத்தியுள்ளார் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, இளையோர்க்கென அதில் சிறப்பான ஒரு விண்ணப்பத்தையும் எழுதியுள்ளார்.

இளையோரே, நீங்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம், உங்கள் கைகளிலுள்ள எதிர்காலத்தை திருட விடாதீர்கள், ஆண்டவரில் நிலைத்திருந்து, கடவுள் உங்களை அன்புகூர்வதுபோன்று, நீங்களும் அவரை அன்புகூருங்கள் என்றும் அதில் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.