2016-07-20 15:55:00

திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகளைத் தொடர்வோர் 30,000,000


ஜூலை,20,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிடும் டுவிட்டர் செய்திகளைத் தொடந்துவரும் மக்களின் எண்ணிக்கை, ஜூலை 19, இச்செவ்வாயன்று, 30 மில்லியன், அதாவது, 3 கோடியை எட்டியது என்று, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano அறிவித்துள்ளது.

@pontifex என்ற முகவரியுடன் திருத்தந்தை வெளியிட்டுவரும் டுவிட்டர் செய்திகளை தொடர்வோர், 2016ம் ஆண்டு துவக்கத்தில் 2 கோடியே 60 இலட்சம் என்ற எண்ணிக்கையையும், இவ்வாண்டு மே மாதம் 18ம் தேதி, 2 கொடியே 90 இலட்சம் என்ற எண்ணிக்கையையும் தாண்டின என்று கூறப்பட்டுள்ளது.

டுவிட்டர் செய்திகளைத் தொடர்வோரில், 39.89 விழுக்காட்டினர், ஸ்பானிய மொழி பேசுவோர் என்றும், 31.92 விழுக்காட்டினர், ஆங்கில மொழி பேசுவோர் என்றும் இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள், இஸ்பானியம், ஆங்கிலம், இத்தாலியம், பிரெஞ்சு, ஜெர்மன், போர்த்துகீசியம், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியிடப்படுகின்றன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.