2016-07-11 16:20:00

கோடை விடுமுறையில் ஓய்வெடுத்து புத்துணர்வு பெறுங்கள்


ஜூலை,11,2016. கோடை விடுமுறை என்பது ஓய்வெடுப்பதற்கும், புத்துணர்வை மீண்டும் பெறுவதற்குமான காலம், குறிப்பாக, நற்செய்தியை  அமைதியக படிப்பதன் வழியாக' என்ற வார்த்தைகளை தன் டுவிட்டர் செய்தியாக இஞ்ஞாயிறன்று வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கோடை விடுமுறையில் தான் இருந்தாலும் அவ்வப்போது, முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விடுமுறை காலத்தை ஒவ்வொருவரும் பயனுள்ள செயல்களை ஆற்றுவதன் மூலம் செலவிட‌வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.

வழக்கமாக இத்தாலியில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் கோடை விடுமுறை மாதங்களாக நோக்கப்பட்டு வரும் சூழலில், ஜூலை மாதம் மட்டுமே திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இம்மாதம் திருத்தந்தையின் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

ஜூன் மாதத்தில் அர்மேனியா நாட்டில் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, இம்மாதம் இறுதி நாட்களில் போலந்து சென்று, உலக இளையோர் நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள உள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.