2016-07-07 15:31:00

டால்டன்கஞ்ச் மறைமாவட்டத்தின் ஆயர் பணி ஓய்வு


ஜூலை,07,2016. இந்தியாவின் டால்டன்கஞ்ச் (Daltonganj)  மறைமாவட்டத்தின் ஆயர், கபிரியேல் குஜுர் அவர்கள் மறைமாவட்ட தலைமைப் பணியிலிருந்து விலக அனுப்பியிருந்த விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று ஏற்றுக் கொண்டார்.

இயேசு சபையைச் சேர்ந்த ஆயர் கபிரியேல் குஜுர் அவர்கள், 1945ம் ஆண்டு பிறந்தவர். 1978ம் ஆண்டு அருள் பணியாளராகவும், 1998ம் ஆண்டு ஆயராகவும் அருள் பொழிவு பெற்றவர்.

ஜூலை 7ம் தேதி, தன் 70வது வயதை நிறைவு செய்துள்ள ஆயர் குஜுர் அவர்கள், கடந்த 18 ஆண்டுகள் டால்டன்கஞ்ச் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றினார்.

ஹசாரிபாக் மறைமாவட்டத்தின் ஆயர், ஆனந்த் ஜோஜோ அவர்களுக்கு, டால்டன்கஞ்ச் மறைமாவட்டத்தின் கண்காணிப்பை, கூடுதல் பொறுப்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.