2016-07-01 16:00:00

பிலிப்பைன்ஸ் புதிய தலைவருக்கு எச்சரிக்கையுடன் ஒத்துழைப்பு


ஜூலை,01,2016. பிலிப்பைன்ஸ் நாட்டில் தனது ஆறு வருட அரசுத்தலைவர் பணியைத் தொடங்கியிருக்கும் Rodrigo Duterte அவர்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவை தனது முழு ஒத்துழைப்பை வழங்கும், அதேநேரம் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படும் என்று, அந்நாட்டுத் திருஅவைத் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

அரசுத்தலைவர் Duterte அவர்கள், இவ்வியாழனன்று பதவியேற்றுள்ளதை முன்னிட்டு இவ்வாறு பேசியுள்ளார் பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Socrates Villegas.

ஆயர்கள், புதிய அரசு குறித்த தங்களின் விமர்சனங்களை வழங்குவார்கள் எனவும், அரசின் குறைகளுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிப்பார்கள் எனவும் கூறிய பேராயர் Villegas, புதிய அரசுத்தலைவரின் அரசியல் வாழ்வு வெற்றிபெற தனது வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : CBCP / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.