2016-06-25 16:03:00

பிரிட்டன் கருத்து வாக்கெடுப்பின் முடிவு மதிக்கப்பட வேண்டும்


ஜூன்,25,2016. அர்மேனியத் தலைநகர் எரேவானுக்குச் சென்ற விமானப் பயணத்தில், பத்திரிகையாளர்களிடம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகிச் செல்வதற்கு நடத்தப்பட்ட பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பு பற்றியும் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ். இது மக்களின் விருப்பம் என்பதால் இது மதிக்கப்பட வேண்டும் என்றார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என 52 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர். 

மேலும், கொலம்பியாவில், அரசுக்கும், FARC புரட்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்தம் கையெழுத்திடப்பட்டிருப்பது குறித்த மகிழ்வை வெளியிட்டார் திருத்தந்தை.

கொலம்பிய, அரசுக்கும், FARC புரட்சியாளர்களுக்கும் இடையே ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்ற போர் நிறைய இரத்தம் சிந்தலை ஏற்படுத்தியுள்ளது, போர் நிறுத்த ஒப்பந்தம் நல்ல செய்தியாகும், இச்செய்தி கேட்டு மிகவும் மகிழ்ந்தேன் என்றார் திருத்தந்தை. இம்முயற்சியை எடுத்துள்ள கொலம்பியாவுக்கு, தனது நல்வாழ்த்தையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.