2016-06-25 16:16:00

திருத்தந்தையின் மருத்துவமனைக்கு திருத்தந்தை பிரான்சிஸ் நன்றி


ஜூன்,25,2016. Gyumri நகர் வளாகத்தில் நடந்த திருப்பலியின் இறுதியில் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தேவையில் இருப்போர்க்கு மிகுந்த மனத்தாராளத்துடனும், பிறரன்புச் செயல்கள் வழியாகவும் உதவும் எல்லாருக்கும், குறிப்பாக, திருத்தந்தையின் மருத்துவமனை வழியாக ஆற்றப்பட்டுவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் விருப்பத்தின்பேரில், 25 ஆண்டுகளுக்கு முன்னர், Ashotskல் இம்மருத்துவமனை தொடங்கப்பட்டது. மேலும், கத்தோலிக்கோஸ். 2ம் Karekin, அரசு அதிகாரிகள், இன்னும் இத்திருப்பலியில் கலந்துகொண்ட எல்லாருக்கும், அண்டை நாடான ஜார்ஜியாவிலிருந்து வந்திருந்த விசுவாசிகளுக்கும், கொல்கத்தா அன்னை தெரேசா சபையினர், அர்மேனிய அமலமரி சபையினருக்கும் நன்றி தெரிவித்தார் திருத்தந்தை. அனைவருக்கும் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கி, இத்திருப்பலியை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலிக்குப் பின்னர், அங்கிருந்து திறந்த காரில், அர்மேனிய அன்னைமரியா அருள்சகோதரிகள் இல்லம் சென்று, அங்குள்ள கருணை இல்லத்தில் வாழும் ஏறத்தாழ அறுபது ஏழை இளையோருடன் சேர்ந்து மதிய உணவருந்தினார் திருத்தந்தை. அதன் பின்னர் அனைவருடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அர்மேனியா சுதந்திரம் அடைந்தபோது. வீடற்றவர்க்கு உதவும் நோக்கத்தில் இந்தக் கருணை இல்லத்தைத் தொடங்கினர் அர்மேனிய அமலமரி சபை சகோதரிகள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.