2016-06-25 13:29:00

குண்டூர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர்


ஜூன்,25,2016. இந்தியாவின் குண்டூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி Bhagyaiah Chinnabathini அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆந்திர மாநிலத்திலுள்ள குண்டூர் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய ஆயர்  Gali Bali அவர்களின் பணி ஓய்வை திருஅவை சட்டம் 401,1ன்படி ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Nalgonda மறைமாவட்டத்தின் Miryalaguda குழந்தை இயேசு திருத்தலப் பங்குக் குருவாகப் பணியாற்றிய அருள்பணி Bhagyaiah Chinnabathini அவர்களை நியமித்துள்ளார்.

1956ம் ஆண்டு Nalgonda மறைமாவட்டத்தில், Motakondur-Yadagirigutta Mandal என்ற ஊரில் பிறந்த புதிய ஆயர் Bhagyaiah அவர்கள், இலக்கியத்திலும், கல்வியியலிலும் முதுகலைப் பட்டங்களைப் பெற்றிருப்பவர். இவர், 1983ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பின்னர், Nalgonda மறைமாவட்டத்தில் பங்குக் குருவாகவும், மறைமாவட்ட இளையோர் மைய இயக்குனராகவும், இன்னும், ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளில் பங்குக் குருவாகவும் பணியாற்றி இருக்கின்றார். 2011ம் ஆண்டு முதல், Miryalaguda குழந்தை இயேசு திருத்தலப் பங்குக் குருவாகப் பணியாற்றி வந்தார். இவர், இச்சனிக்கிழமையன்று, குண்டூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, நியமிக்கப்பட்டுள்ளார்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.