2016-06-25 16:08:00

Gyumri நகர் வளாகத்தில் நடந்த திருப்பலியில் கத்தோலிக்கோஸ் உரை


ஜூன்,25,2016. 1988ம் ஆண்டில், அர்மேனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில், வீடுகளை இழந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, கத்தோலிக்கத் திருஅவை, உடன்பிறப்பு அன்புணர்வில் ஆற்றிய இடர்துடைப்புப் பணிகளுக்கு நன்றி. இந்நிலநடுக்கத்தில் 25 ஆயிரம் பேர் இறந்தனர். மேலும், Gyumri நகர், அர்மேனியாவின் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றாகும். இந்நகரில், அர்மேனியக் கிறிஸ்தவ விழுமியங்கள் மலர்ந்தன. அந்நகர் மக்கள், கிறிஸ்தவ சகோதரத்துவ நல்லிணக்க வாழ்வின் அழகான மரபைக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, இந்நகரின், இறைவனின் தூய அன்னை ஆலயம், சோவியத்தின் கம்யூனிச காலத்தில் அனைத்துக் கிறிஸ்தவ சபைகளுக்கும் திறந்திருந்தது. ஏனென்றால், கம்யூனிச காலத்தில், ஆலயங்கள் அழிக்கப்பட்டன அல்லது மூடப்பட்டன. இந்நாட்டு மக்களின் ஆர்வம் நிறைந்த உறுதிப்பாட்டால், புனித Etchmiadzin தலைமை ஆலயமும், இன்னும் சில ஆலயங்களும் இன்னும் திறக்கப்பட்டுள்ளன. இருபதாம் நூற்றாண்டில் ஒட்டமான் பேரரசின் அழிவு நடவடிக்கைகள் மற்றும், ஆக்ரமிப்பு அரசியலில், Gyumri மக்களின் உறுதிப்பாடு தனியிடம் பெற்றது....

இவ்வாறு அனைத்து அர்மேனியர்களின் கத்தோலிக்கோஸ் 2ம் Karekin அவர்கள், திருப்பலியின் தொடக்கத்தில் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றியானார். அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவைத் தலைவர், பொதுவாக, கத்தோலிக்கோஸ் என அழைக்கப்படுகிறார். 1915ம் ஆண்டில் அர்மேனிய அடக்குமுறையில் இறந்தவர்களில் ஐம்பதாயிரம் பேரை, 2015ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி புனிதர்களாக அறிவித்தது அர்மேனிய அப்போஸ்தலிக்கத் திருஅவை. ஏப்ரல் 24ம் தேதி இதில் பலியானவர்களின் நினைவு நாளாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.