2016-06-24 16:26:00

உலக மயமாக்கலில் மனித உரிமை குறித்து திருப்பீடப் பார்வையாளர்


ஜூன்,24,2016. உலக மயமாக்கல் கொள்கைகள், இக்காலத்தில் பல்வேறு துறைகளில் ஏற்படுத்தியுள்ள  தாக்கங்கள், மனித உரிமைகள் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன என ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் உரையாற்றினார் திருப்பீடப் பார்வையாளர் பேராயர் Ivan Jurkovič.

தொழில் துறைகளில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டிதற்கு வழிகாட்டும் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும் தன் உரையில் குறிப்பிட்ட பேராயர் Jurkovič அவர்கள், 'பாதுக்காப்பது, மதித்தல், தீர்வுகாண்தல்'  என்பவை, ஓர் அரசியல் அர்ப்பணமாக இடம்பெறவேண்டும் என்றார். 

தொழில்துறையில் மக்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்படுவதற்கு அனைத்துலக சட்டங்கள் உறுதி வழங்க வேண்டும் எனவும் விண்ணப்பித்தார் பேராயர் Jurkovič.

அனைத்து அணுகுமுறைகளும், சட்டங்களும், தொலைநோக்கை மனதில் கொண்டதாய், மனித குலத்தின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கும் ஒருமைப்பாட்டிற்கும் உதவுவதாக இருக்க வேண்டும் எனவும் ஜெனிவாவின் ஐ.நா. அவைக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டார், பேராயர் Jurkovič. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.