2016-06-08 17:50:00

பிலிப்பைன்ஸ் கத்தோலிக்கர், இரமதான் நோன்பு இருக்க பரிந்துரை


ஜூன்,08,2016. பிற மதங்களுடன் உரையாடல் நடத்துவதன் ஓர் அடையாளமாக, பிலிப்பைன்ஸ் கத்தோலிக்கர், இரமதான் புனித மாதத்தில், தோழமையுணர்வு நோன்பைக் கடைப்பிடிக்குமாறு, தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு கேட்டுள்ள மின்டனாவோ தென் மாநிலத்தின் ஓய்வுபெற்ற பேராயர் Fernando Capalla அவர்கள், நோன்பிருந்து, முஸ்லிம்களின் இரமதான் புனித மாதத்தைக் கடைப்பிடிக்குமாறு கத்தோலிக்கரைக் கேட்டுள்ளார்.

ஒன்றிப்பின் தளங்களில் ஒன்றாக, கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர் அல்லாதவர்களும்    தோழமையுணர்வு நோன்பைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ள Davao பேராயர் Fernando Capalla அவர்கள், பிற மதங்களுடன் உரையாடலை மேற்கொள்வதன் அடையாளமாக, இத்தகைய நடவடிக்கையை நாம் ஊக்குவிக்க வேண்டுமென்று கூறியுள்ளார்.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.