2016-06-08 15:27:00

இது இரக்கத்தின் காலம்... – எதுவும் நமக்கு சொந்தம் இல்லை..


ஒரு பெரும் செல்வந்தர் தன்னைச் சந்திக்க வந்த வயதான துறவியை அழைத்துப் போய் தனக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி,“இவ்வளவும் என்னுடையது சுவாமி” என்றார். அதற்குத் துறவி, “இல்லையேப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் ஐம்பது வருடத்திற்கு முன் சொன்னானே”என்றார்.

அதற்கு செல்வந்தர், “அது என் தாத்தாதான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் விற்கவே இல்லை” என்றார். “இருபது ஆண்டுகளுக்கு முன் வேறொருவர் இது என் நிலம் என்றாரேயப்பா”என்று கேட்டார் துறவி.“அவர் என் அப்பாவாக இருக்கும்”என்றார் செல்வந்தர்.

“நிலம் என்னுடையது, என்னுடையது என்று என்னிடம் காட்டிய அந்த இருவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்?”என்று துறவி கேட்டார். அங்கு அதே வயலுக்கிடையில் தெரிந்த இரு மண்படங்களைக் காட்டி, “அந்த மண்டபங்களுக்குக் கீழேதான் அவர்களைப் புதைத்து வைத்திருக்கிறோம்”என்றார் அந்த செல்வந்தர்.

துறவி சிரித்துக்கொண்டே, “நிலம் இவர்களுக்குச் சொந்தமா..? அல்லது இவர்கள் நிலத்திற்குச் சொந்தமா..? என் நிலம், என் சொத்து, என் செல்வம் என்றவர்கள் நிலத்திற்குச் சொந்தமாகி விட்டனர். அவர்கள் இப்போது இல்லை. ஆனால் நிலம் மட்டும் இருக்கிறது. இது என்னுடையது எனக் கூறும் நீயும், ஒருநாள் இந்த நிலத்திற்குள் புதைக்கப்படுவாய். உன் மகன் வந்து இது என்னுடையது என்பான்” என்று கூறி முடித்தார் துறவி.

செல்வந்தர் தனது அறியாமையை எண்ணித் தலை குனிந்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.