2016-06-06 16:30:00

திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகள்


ஜூன்,06,2016. “ஒவ்வொரு மனிதரும் தங்களின் கொடைகளை மீண்டும் கண்டுணர்வார்களாக; சமூகங்கள் தங்களின் மதிப்பீடுகளைப் பிறருக்கு வழங்கி, பிறரின் அனுபவங்களைப் பெறுவதற்குத் திறந்தமனம் கொண்டிருப்பார்களாக”என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இத்திங்களன்று வெளியாயின. 

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில், “புனிதர்கள் சூப்பர் மனிதர்களும் அல்ல, அவர்கள் குறையின்றிப் பிறந்தவர்களும் அல்ல; அவர்கள் கடவுளின் அன்பை உணர்ந்தபோது, அதைப் பின்சென்று, பிறருக்குப் பணியாற்றியவர்கள்” என்ற வார்த்தைகள் வெளியாயின.

இன்னும், ஜூன் 12, வருகிற ஞாயிறு காலை பத்து முப்பது மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், நோயாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் யூபிலி விழாத் திருப்பலியை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், ஒவ்வொரு நிலையினரும் யூபிலி விழாவைச் சிறப்பித்து வருகின்றனர். இவ்வாண்டின் ஒரு நிகழ்வாக, நோயாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் யூபிலி விழா, ஜூன் 10 முதல் 12 வரைச் சிறப்பிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.