2016-06-01 17:55:00

நேர்காணல் – இலஞ்சம் வாங்காத கிராம நிர்வாகி – ரா.முத்துமாரி


ஜூன்,02,2016. திருமதி ரா.முத்துமாரி அவர்கள், தமிழகத்தின், கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா, காளியாபுரம் வடக்கு, கிராம நிர்வாக அதிகாரி. இவரது அலுவலக இருக்கைக்கு மேலே எழுதப்பட்டுள்ள, 'லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!, இலஞ்சம் வாங்கமாட்டேன் என்ற அறிவிப்பு, அங்குச் செல்வோரை வரவேற்கின்றது. இவ்வாறு எழுதி துாய்மையான நிர்வாகம் நடத்திவரும், அதிகாரி முத்துமாரி அவர்களுக்கு, சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வத்திக்கான் வானொலியும், ரா.முத்துமாரி அவர்களைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டைத் தெரிவித்தது.








All the contents on this site are copyrighted ©.