2016-05-27 16:13:00

அருளாளர் அன்னை தெரேசா பற்றிய புதிய நூல்


மே,27,2016. அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் எழுதியவைகளில் ஏற்கனவே வெளியிடப்படாதவை, வருகிற ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“இரக்கத்திற்கு அழைப்பு : அன்புசெலுத்த இதயங்கள், பணியாற்ற கரங்கள்” என்ற தலைப்பில், அன்னை தெரேசா அவர்களின் எழுத்துக்கள் அடங்கிய புதிய நூல், வருகிற ஆகஸ்ட் 16ம் தேதி வெளியிடப்படும் என்று, Crown Publishing Group கூறியதாக, AP செய்தி நிறுவனத்திடம் அறிவித்துள்ளது.

அருளாளர் அன்னை தெரேசா அவர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவதற்கு வேண்டுகையாளராகப் பணியாற்றிய அருள்பணி Brian Kolodiejchuk அவர்கள் எழுதிய இந்த நூல், இரக்கம் மற்றும் பரிவன்பு பற்றிய கட்டுரைகளையே கொண்டிருக்கும்.

1997ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி, தனது 87வது வயதில் இறந்த அருளாளர் அன்னை தெரேசா அவர்களை, வருகிற செப்டம்பர் 4ம் தேதி புனிதராக அறிவிப்பார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : Catholic Herald / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.