2016-05-25 16:57:00

கால்களால் தேர்வு எழுதி 71% மதிப்பெண்கள் சாதனை


மே,25,2016. இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் மணிப்புரி மாவட்டத்தில், 16 வயது நிரம்பிய அஜய் குமார், தனது கால் விரல்களுக்கிடையில் பேனாவை வைத்து 12ம் வகுப்பு தேர்வு எழுதி, 71 விழுக்காட்டு மதிப்பெண்கள் பெற்று, சிறப்பான வெற்றி பெற்றள்ளார்.

கைகள் முழுமையாய் இல்லாத மாற்றுத்திறனாளியாகிய அஜய் குமார், சாதாரண எளிய குடும்பத்தில் பிறந்தவர். மடிக்கணனியையும் கால் விரல்களால் பயன்படுத்தும் இவர், தொடர்ந்து படித்து பொறியியலாளராக வேண்டுமென்ற ஆவலைக் கொண்டிருக்கின்றார்.

கால்களின் பெருவிரல்களுக்கிடையில் பேனாவை வைத்து எழுதி பிளஸ் 2 தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ளார் 16 வயது நிரம்பிய அஜய் குமார். 

ஆதாரம் : NDTV / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.