2016-05-16 17:07:00

திருத்தந்தையை சந்தித்தார் பல்கேரிய அரசுத்தலைவர்


மே,16,2016. பல்கேரிய அரசுத்தலைவர் Rosen Plevneliev அவர்களை இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சந்திப்பின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசுத்தலைவருக்கு, "Laudato sii", "Evangelii gaudium",  "Amoris laetitia"  ஆகிய திருமடல்களின் பிரதிகளோடு, அமைதியின் பதக்கம் ஒன்றையும் பரிசாக அளித்தார். புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியசின் முதல் சீடரான புனித கிளமென்டின் உருவப்படம் ஒன்றையும் திருத்தந்தைக்குப் பரிசாக வழங்கினார் அரசுத்தலைவர்.

மேலும், இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ' உண்மையான விசுவாசமும், செயல்பாடுடைய பிறரன்பும் நிறைந்த வாழ்வை நாம் வாழும்படி, தூய ஆவியாரின் கொடைகள் நமக்கு அபரிவிதமாக வழங்கப்பட்டுள்ளன’ என எழுதியுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.