2016-05-13 16:32:00

திருத்தந்தையின் டுவிட்டர், ஜப்பான் இளவரசர் சந்திப்பு


மே,13,2016. “நம் இதயங்களும், செயல்களும் பிறரன்பால், இறையன்பால் தூண்டப்பட்டால், நம் தொடர்புகள், கடவுளின் சொந்த வல்லமையால் தொடப்படும்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வெள்ளியன்று வெளியிடப்பட்டன.

மேலும், ஜப்பான் நாட்டு இளவரசர் Akishino மற்றும் இளவரசியை, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இருபது நிமிடம் இடம்பெற்ற இச்சந்திப்பு குறித்த வேறு விபரங்களை, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிடவில்லை.

ஜப்பான் இளவரசரும், இளவரசியும் திருத்தந்தைக்கு, கைவேலைப்பாடுகள் நிறைந்த பீங்கான் மலர் பாத்திரம் ஒன்றையும், பேரரசர் குடும்ப இலச்சினையையும் அன்பளிப்பாகக் கொடுத்தனர். திருத்தந்தையும், அத்தம்பதியருக்கு, இறைவா உமக்கே புகழ் என்ற திருமடலின் (Ladauto si’) பிரதி ஒன்றையும், அமைதிப் பதக்கம் ஒன்றையும் அளித்தார்.

பேரரசர் Akihito அவர்களின் இளைய மகனான இளவரசர் Akishino அவர்கள், அரசப் பதவியில் அமரும் இரண்டாவது வாரிசாவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.