2016-05-13 16:50:00

திருத்தந்தை : ஜூன் 24-26, ஆர்மேனியத் திருத்தூதுப் பயணம்


மே,13,2016. வருகிற ஜூன் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆர்மேனியாவில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் குறித்த விபரங்களை, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளது திருப்பீடம்.  

ஜூன் 24ம் தேதி ஆர்மேனியாவின் Yerevan நகருக்கு பிற்பகல் 3 மணியளவில் செல்லும் திருத்தந்தை, அன்று மாலை அரசுத்தலைவர் மாளிகையில், அரசுத்தலைவரைச் சந்தித்தல், அரசு மற்றும் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து உரையாற்றுதல், அப்போஸ்தலிக்க மாளிகையில் ஆர்மேனிய முதுபெரும் தந்தையைச் சந்தித்தல் ஆகிய நிகழ்வுகளை நடத்துவார்.

25ம் தேதி Gyumri சென்று, Vartanants வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றுதல், அந்நகர் ஏழு காயங்கள் பேராலயம் செல்லுதல், மறைசாட்சிகள் பேராலயம் செல்லுதல், Yerevanல், மாலையில் அமைதிக்காக கிறிஸ்தவ சபைகளுடன் செபம்,

இன்னும், 26ம் தேதி, ஆயர்களைச் சந்தித்தல், அப்போஸ்தலிக்க மாளிகையில் முதுபெரும் தந்தை மற்ற அனைத்து ஆயர்களுடன் மதிய உணவருந்திய பின்னர், அறிக்கையில் கையெழுத்திடல், மாலையில் KHOR VIRAP ஆதீனம் செல்லுதல், பின்னர் விடைபெற்று உரோம் திரும்புதல் ஆகியவை திருத்தந்தையின் ஆர்மேனியப் பயணத் திட்டத்தில் உள்ளன. இப்பயணத்தை நிறைவுசெய்து ஜூன் 26ம் தேதி இரவு 8.40 மணிக்கு உரோம் Ciampino விமான நிலையம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.