2016-05-11 16:14:00

கர்தினால் பரோலின், எஸ்டோனியாவில் மேய்ப்புப்பணி பயணம்


மே,11,2016. மே 10,11 ஆகிய இரு நாட்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், எஸ்டோனியா நாட்டில் மேய்ப்புப்பணி பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

இந்தப் பயணத்தின் போது, எஸ்டோனியா அரசுத் தலைவர், பிரதம மந்திரி மற்றும் பல அரசு அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.

சோவியத் ஒன்றியத்திலிருந்து எஸ்டோனியா விடுதலை பெற்றபின், 1993ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள், அந்நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டு, திருப்பீடத்திற்கும், எஸ்டோனியா நாட்டிற்கும் இடையே தூதரக உறவுகளை மீண்டும் ஒரு முறை நிறுவினார்.

அவருக்குப் பின், அந்நாட்டிற்குச் செல்லும் வத்திக்கான் உயர் அதிகாரி, திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.