2016-05-07 15:23:00

பங்களாதேஷ் விவசாயிகளுக்கு காரித்தாஸ் உதவி


மே,07,2016. பங்களாதேஷில் அண்மையில் இடம்பெற்ற கடும் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு, அந்நாட்டு கத்தோலிக்க காரித்தாஸ் பிறரன்பு நிறுவனம் உதவி வருகிறது.

பங்களாதேஷ் நாட்டில், கடந்த வாரத்தில் பெய்த கன மழை மற்றும் புயலால், Sylhet மற்றும் Sunamganj மாவட்டங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கின. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன, ஒரு இலட்சத்துக்கும் அதிகமான கிராமத்தினர் வீடுகளை இழந்தனர். அதோடு, நெல் அறுவடைக்குத் தயாராக இருந்த நேரத்தில், ஏறத்தாழ ஐம்பதாயிரம் ஹெக்டேர் நெல் வயல்கள் சேதமாயின.

இவ்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரண உதவிகளை ஆற்றி வருகிறது அந்நாட்டு காரித்தாஸ் நிறுவனம். 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.