2016-04-27 16:18:00

அன்னை தெரேசா புனிதர் பட்ட நிகழ்வுக்கு பிரதமர் மோடி


ஏப்.27,2016. வருகிற செப்டம்பரில் வத்திக்கானில் அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் புனிதராக அறிவிக்கப்படவிருக்கும் நிகழ்வில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது தலைமையிலான பிரதிநிதிக் குழுவுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் இந்திய கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர்கள்.

இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் தலைமையில், கடந்த திங்களன்று பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்து, இப்பரிந்துரையை முன்வைத்தனர்.

அதோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இந்தியாவுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்குமாறும், இக்குழு, பிரதமர் மோடி அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், வருகிற செப்டம்பர் நான்காம் தேதி புனிதராக அறிவிக்கப்படவிருக்கிறார். இந்நிகழ்வில் கலந்துகொள்வது குறித்து, தான் பரிசீலிப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.