2016-04-26 13:53:00

அரசியல்வாதிகளின் சொற்போருக்கு ஆயர் எச்சரிக்கை


ஏப்.26,2016. தென்னாப்ரிக்க அரசியல்வாதிகளிடமிருந்து வெளிவரும் சொற்போர்கள், தேர்தல்கால வன்முறையையும், உள்நாட்டுக் கலவரத்தையும் தூண்டக்கூடும் என்று எச்சரித்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர்

தென்னாப்ரிக்காவின் பொருளாதார சுதந்திரப் போராளிகள் அமைப்பின் தலைவரிடமிருந்து நாங்கள் கேட்டுள்ள வன்முறையைத் தூண்டும் சொற்கள் கவலையளிக்கின்றன என்று, அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் ஆயர் Abel Gabuza அவர்கள் கூறியுள்ளார்,

அரசியல்வாதிகளின் சொற்போரைக் கண்டித்து, இத்திங்களன்று அறிக்கை வெளியிட்ட ஆயர் Gabuza அவர்கள், உள்நாட்டுப் போரின் தீய விளைவுகளை, மற்ற ஆப்ரிக்க நாடுகளில் நாங்கள் பார்த்துள்ளோம் என்பதால், தென்னாப்ரிக்காவும் இத்தகைய நிலைக்கு உட்படக் கூடாது என்று கூறியுள்ளார்.

அப்பாவிகளின் உயிரிழப்பு, புலம்பெயர்ந்தவர் பிரச்சனை, சீரமைக்கப்பட முடியாத பொருளாதாரச் சேதம் போன்ற, உள்நாட்டுப் போரின் தீய விளைவுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார் ஆயர் Gabuza.

தென்னாப்ரிக்காவில், வருகிற ஆகஸ்ட் மூன்றாம் தேதி உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

ஆதாரம் : CNS /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.