2016-04-23 15:44:00

இயேசுவின் மீட்பளிக்கும் அன்புக்குச் சாட்சியாக விளங்குங்கள்


ஏப்.23,2016. இயேசுவின் மீட்பளிக்கும் அன்புக்கும், கனிவுக்கும் சாட்சியாக விளங்குங்கள் என்று, இத்தாலிய தேசிய அருங்கொடை இயக்கத்தினரைக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“நானே வாயில்:என் வழியாய் நுழைபவர் மீட்புப்பெறுவர்” என்ற தலைப்பில், தேசிய மாநாட்டில் கலந்துகொள்ளும் அருங்கொடை இயக்கக் குழுக்கள் மற்றும் சமூகங்களுக்கு இவ்வெள்ளியன்று அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆழமான ஒப்புரவு மற்றும் ஒன்றிப்பை ஏற்படுத்தும் இம்மாநாட்டின் நல்ல நோக்கம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற தனது ஆவலையும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

தங்கள் வாழ்வை, தூய ஆவியாரில் புதுப்பிக்கும் நோக்கத்தில், இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைவரும், இயேசுவின் மீட்பளிக்கும் அன்புக்குச் சாட்சியாக விளங்குமாறு கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்துள்ளார்.

திருத்தந்தையின் இச்செய்தியை, திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் பேராயர் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.