2016-04-18 15:44:00

போலியோ நோயை ஒழிக்க நாடுகள் நடவடிக்கை


ஏப்.18,2016. போலியோ நோயை முற்றிலும் ஒழிப்பதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகளை, 150க்கும் அதிகமான நாடுகள் தொடங்கியுள்ளன.

போலியோன நோயானது, தற்காலிக அல்லது நிலையான பக்கவாதத்தை ஏற்படுத்துவதுடன், உயிருக்கு ஆபத்தானதாகவும் அமைகிறது.

அண்மைக் காலமாக, குறைந்த எண்ணிக்கையிலேயே, போலியோவால் சிறார் பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்நோயைத் தடுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் எடுக்கப்படாவிட்டால், அது மீண்டும் பரவும் அபாயம் இருப்பதாக, உலக நலவாழ்வு நிறுவனம், கவலை தெரிவித்துள்ளது.

போலியோ நோயை ஒழிப்பதற்கு, Rotary அமைப்பு முயற்சிகளைத் தொடங்கிய காலக் கட்டத்தில், ஒவ்வோர் ஆண்டும், 3,50,000த்துக்கும் அதிகமான சிறார், இந்த உயிர்க்கொல்லி நுண்கிருமியால், பக்கவாதத்தால் தாக்கப்பட்டனர் என்று, இந்த அமைப்பின் போலியோ ஒழிப்பு நடவடிக்கையின் Michael K. McGovern அவர்கள் கூறினார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.