2016-04-15 15:47:00

பணக்கார நாடுகளில் சிறார் மத்தியில் சமத்துவமின்மை


ஏப்.15,2016. கல்வி, திருப்தியான வாழ்க்கைமுறை போன்ற துறைகளில், அதிக வருவாய் உள்ள நாடுகளில் நிலவும் சமத்துவமின்மை, சிறாரை வெகுவாய்ப் பாதிக்கின்றது என்று, ஐ.நாவின் யூனிசெப்(UNICEF) குழந்தை நல நிறுவனத்தின் புதிய அறிக்கை ஒன்று கூறுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொருளாதார ஒன்றிப்பு-வளர்ச்சி நிறுவனத்தைச்(OECD) சேர்ந்த 41 நாடுகளில், சிறார் நலன் குறித்து எடுக்கப்பட்ட ஆய்வில், சிறார் மத்தியில் நிலவும் சமத்துவமின்மையில் டென்மார்க் நாடு முதலிடத்திலும், இஸ்ரேல், துருக்கி ஆகிய நாடுகள் கடைசி இடத்திலும் உள்ளன என்று தெரியவந்துள்ளது. 

எந்த ஒரு நாட்டிலும், சிறாரின் நலன், கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டுமென்று, யூனிசெப் நிறுவனத்தின் ஆய்வு அலுவலக இயக்குனர்  Sarah Cook அவர்கள் கூறினார்.

2002ம் ஆண்டுக்கும், 2014ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், நலவாழ்வு வசதிகள், கல்வி வாய்ப்பு, திருப்தியான வாழ்வுமுறை போன்ற துறைகளில் சமத்துவமின்மை அதிகரித்து காணப்பட்டதாக, Innocenti என்ற இவ்வறிக்கை கூறுகிறது. 

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.