2016-04-15 15:40:00

திருச்சூர் பூரம் கட்டுப்பாட்டிற்கு எதிராக பேராயர்


ஏப்.15,2016. கேரளாவில் கொல்லம் இந்துக் கோவிலில் ஏற்பட்ட பட்டாசு வெடிவிபத்தைத் தொடர்ந்து, திருச்சூர் பூரத்திற்கு(Thrissur Pooram) விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டிற்கு எதிராக இடம்பெறும் போராட்டத்திற்கு, திருச்சூர் கத்தோலிக்க ஆயரும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

பூரம் விழா சுமுகமாக நடைபெறுவதற்கு, பாதுகாப்பு நிறைந்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசை வலியுறுத்தியுள்ளார் திருச்சூர் பேராயர் Andrews Thazhathu.

பூரம் விழாவின்றி திருச்சூர் எப்படியிருக்கும்? என்ற கேள்வியை எழுப்பியுள்ள பேராயர் Andrews Thazhathu அவர்கள்,  புகழ்பெற்ற Vadakkumnatha கோவில் வாயில்கள் முன்பாக நடந்த போராட்டத்திலும் கலந்துகொண்டுள்ளார்.

இது இந்து மத விழாவாக இருந்தபோதிலும், கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் கலந்து கொள்கின்றனர் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகின்றது. 

ஆதாரம் : Indian Express / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.