2016-04-15 15:15:00

சகிப்பற்ற மற்றும் பாகுபாட்டு நிலைகளால் உருவாகும் சவால்கள்


ஏப்.15,2016. சகிப்பற்ற தன்மைகளாலும் பாகுபாட்டு நிலைகளாலும் உருவாக்கப்படும் சவால்கள் என்ற தலைப்பில் ஐ.நா.வில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீடப் பிரதிநிதி, இத்தகைய நிலைகள் உருவாவதற்கான காரணங்கள் ஆராய்ந்தறியப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

சகிப்பற்ற தன்மைகள் மற்றும் பாகுபாட்டு நிலைகளின் உண்மையான அடிப்படைக் காரணங்கள் அறியப்படாமல் கொணரப்படும் எந்த ஒரு பதிலுரையும் அதற்குரிய தீர்வைக் கொணர முடியாது என்ற திருப்பீடப் பிரதிநிதி Mons. Janus Urbanczyk, அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள சரிநிகர் உரிமைகள் சரியாக கடைப்பிடிக்கப்படாமையாலேயே பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படும் நிலை உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

அமைதி, சகிப்பு நிலைகள், மற்றவர்களின் மாண்பு மற்றும் உரிமைகளுக்கான மதிப்பு போன்றவைகளுக்காக அனைத்து மதங்களின் விசுவாசிகளும் குரலெழுப்ப வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார் திருப்பீட பிரதிநிதி Mons. Urbanczyk. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.