2016-04-13 15:27:00

சீனாவில் பெற்றோரைப் பிரிந்து ஆறு கோடிப் பிள்ளைகள்


ஏப்.13,2016. சீனாவில், பெருநகரங்களில் தங்கி வேலை செய்யும் பெற்றோர்களால் கிராமங்களில் கைவிடப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய ஆறுகோடி இருக்கலாம் என்று, ஒரு கணக்கெடுப்பு கூறுகின்றது.

சீனாவின் முக்கியமான சமூகச் சவால்களில் ஒன்றான, பெற்றோரிடமிருந்து பிரிந்திருக்கும் குழந்தைகள் என்பதால், அது குறித்த தேசியக் கணக்கெடுப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

பிள்ளைகள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும் நிலை உருவாகியிருப்பதாகவும், சில பள்ளிகளில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமான மாணவர்கள் பெற்றோர் இல்லாமல் வளர்கிறார்கள் எனவும் கூறப்படுகின்றது.

எடுத்துக்காட்டாக, பதினான்கு வயது தவ் லானும் அவர் தம்பியும், தங்களுக்கான காய்கறிகளைத் தாங்களே பயிரிடுகிறார்கள் மற்றும் உணவையும் அவர்களே சமைத்துக் கொள்கிறார்கள் என்றும் கூறப்படுகின்றது. இவர்களின் பெற்றோர் ஆயிரம் மைலுக்கு அப்பால் வேலை செய்கிறார்கள். ஆண்டுக்கொருமுறை மட்டுமே வந்து செல்கிறார்கள்.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.