ஏப்.12,2016. வன்முறையற்ற வழியில், அமைதியை ஏற்படுத்துவது பற்றி, திருப்பீட நீதி, அமைதி அவையின் ஒத்துழைப்புடன், பாக்ஸ் கிறிஸ்டி அமைப்பு உரோம் நகரில் நடத்தும் கருத்தரங்கில் தொடக்கவுரையாற்றிய கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், அமைதியின் உண்மையான அர்த்தம் பற்றிப் பேசினார்.
வன்முறை நிறைந்த சூழல்களைக் கிறிஸ்தவர்கள் நோக்கும் முறை பற்றி இரு கருத்துக்களை முன்வைத்த கர்தினால் டர்க்சன் அவர்கள், பதட்டநிலைக்கும் வன்முறைக்கும் இடையேயுள்ள வேறுபாடு பற்றி முதலில் விளக்கினார்.
வன்முறை தீயது, பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக, வன்முறையை ஏற்க முடியாது என்று, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் கூறியதைக் குறிப்பிட்ட கர்தினால் டர்க்சன், அமைதியை ஏறக்படுத்துவதற்கு தேவையானது எது என்பது குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |