2016-04-12 16:05:00

கொரியாவில் கத்தோலிக்கர் கொல்லப்பட்டதன் 150ம் ஆண்டு


ஏப்.12,2016. கொரியாவில் கத்தோலிக்கர் மிகக் கொடூரமாய்த் துன்புறுத்தப்பட்டதன் 150ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர்கள், மறைசாட்சிகளின் வாழ்வைப் பின்பற்றி நடக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

1886ம் ஆண்டின் Byeongin அடக்குமுறையை மறக்க வேண்டாமென்று, கொரியக் கத்தோலிக்கரைக் கேட்டுள்ள ஆயர்கள், தொடக்ககாலக் கத்தோலிக்கர், இக்காலக் கத்தோலிக்கருக்கு எவ்வாறு எடுத்துக்காட்டுகளாய் உள்ளனர் என்பதை விளக்கியுள்ளனர்.

அன்புக்குச் சாட்சி பகர்வது, ஏழைகளுக்குப் பிறரன்புப் பணி செய்வது மற்றும், இரக்கப் பண்பின் அடிப்படையில் அர்த்தமுள்ள திருஅவை சமூகங்களை அமைப்பதன் வழியாக, தொடக்ககாலக் கத்தோலிக்கர், இக்காலத்தவருக்கு எடுத்துக்காட்டுகளாய் உள்ளனர் என்று ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.

மூன்று ப்ரெஞ்ச் மறைபோதகர்கள் மற்றும் இரு கொரியப் பொதுநிலையினர் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டதை நினைவுகூரும் மார்ச் 30ம் தேதியன்று ஆயர்களின் அறிக்கை வெளியிடப்பட்டது.

கொரியாவில், 1886ம் ஆண்டில் இடம்பெற்ற கத்தோலிக்கருக்கு எதிரான அடக்குமுறையில், ஒன்பதாயிரம் பேர், தங்கள் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்டனர். 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.