2016-04-09 14:31:00

இது இரக்கத்தின் காலம் - "அண்ணா, உங்க பேர் என்ன, ஜீசஸா?"


இளைஞர் ஒருவர், தன் மாத ஊதியத்திலிருந்து ஒரு கணிசமானத் தொகையை ஒவ்வொரு மாதமும் ஒதுக்கிவைப்பார். மாதத்தின் இறுதி ஞாயிறன்று, அருகில் உள்ள சேரியில் வாழும் சில சிறுவர்களை அழைத்துக்கொண்டு, நாள் முழுவதும் பல சுற்றுலா இடங்களுக்குச் செல்வார். மாலையில், ஒரு நல்ல உணவகத்திற்குச் சென்று, அனைவரும் சேர்ந்து விருந்து உண்பர். ஒரு நாள் அவர்கள் அவ்விதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அச்சிறுவர்களில் ஒருவர், இளைஞரை நோக்கி, "அண்ணா, உங்க பேர் என்ன, ஜீசஸா?" என்று கேட்டார்.

"ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர். (யோவான் 13: 34-35)

இயேசுவின் சீடர்கள் என்று மட்டுமல்ல, இயேசுவின் பிம்பங்கள் என்றும் நம்மை மற்றவர்கள் அடையாளம் கண்டுகொள்ள, இரக்கத்தின் காலம் வாய்ப்பை வழங்குகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.