2016-04-08 15:36:00

பாப்பிறை பிறரன்பு நிறுவனத்தின் ஆதரவுக்கு திருத்தந்தை நன்றி


ஏப்.08,2016. பாப்பிறை பிறரன்பு நிறுவனம், தனக்கும், உலகளாவியத் திருஅவைக்கும் மிகுந்த தாராளத்துடன் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாப்பிறை பிறரன்பு நிறுவனத்தின் 225 பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, இரக்கத்தின் பேருண்மையைத் தியானிக்கும் இந்த யூபிலி ஆண்டில், இப்பிரதிநிதிகள், உரோமைக்கு மேற்கொண்டுள்ள இத்திருப்பயணம்,   இவர்களின் தூய வாழ்வுக்குப் புதிய உந்துதலைக் கொடுக்கட்டும் என்று வாழ்த்தினார்.

இரக்கத்தின் உடல் மற்றும் ஆன்மீகப் பணிகள் வழியாக, எல்லா நிலைகளிலும் இரக்கம் தேவைப்படும் அனைவருக்கும் உதவுவதற்கு, கிறிஸ்துவால் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையரின் திருப்பணிக்கு ஆதரவுதரும் நோக்கத்தில், 1988ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட பாப்பிறை பிறரன்பு நிறுவனம், 22 கோடிக்கு மேற்பட்ட டாலர் பெறுமான உதவிகளை வழங்கியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.