2016-04-05 14:59:00

நற்செய்தியின் அழகை வாழ்வதற்கு ஆண்டவரிடம் வரம்


ஏப்ரல்,05,2016. "நற்செய்தியின் உண்மை, அழகு மற்றும் வாழ்வை மாற்றும் வல்லைமையை ஒளிரச் செய்யும் மனிதர்களாக வாழ்வதற்கு ஆண்டவரிடம் வரம் கேட்போம்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக, இச்செவ்வாயன்று வெளியிட்டார்.

மேலும், இந்த ஏப்ரல், மே மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருவழிபாடுகள் குறித்த விபரங்களை, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பாளரான, பேரருள்திரு குய்தோ மரினி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 17, ஞாயிறு காலை 9.15 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், புதிய அருள்பணியாளர்களுக்குத் திருப்பொழிவு மற்றும் ஏப்ரல் 24, ஞாயிறன்று, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், காலை 10.30 மணிக்கு, சிறுவர் சிறுமியர் யூபிலித் திருப்பலியை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 5, வியாழன் மாலை 6 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், கண்ணீரைத் துடைத்தல் என்ற தலைப்பில் மாலை வழிபாடு, மே 15, ஞாயிறு காலை 10 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் தூய ஆவியார் பெருவிழா திருப்பலி, மே 26, வியாழன் மாலை 7 மணிக்கு, புனித ஜான் இலாத்தரன் பசிலிக்கா வளாகத்தில், இயேசுவின் திருஉடல், திருஇரத்தப் பெருவிழா திருப்பலி, மே 29, ஞாயிறு காலை 10.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், தியாக்கோன்கள் யூபிலித் திருப்பலி ஆகியவற்றை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.