2016-04-02 14:53:00

இரக்கமுள்ளவராய் இருப்பது என்பது, அன்பில் வளர்வதாகும்


ஏப்ரல்,02,2016. "இரக்கமுள்ளவராய் இருப்பது என்பது, துணிச்சல், மனத்தாராளம் மற்றும் நிதர்சனத்தைக் கொண்ட அன்பில் வளர்வதாகும்" என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 2, இச்சனிக்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக அமைந்தன.

மேலும், ஏப்ரல் 3, இறை இரக்கத்தின் ஞாயிறன்று, காலை 10.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், இறை இரக்கத் திருவிழா திருப்பலியை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த இறை இரக்கத் திருவிழாவை முன்னிட்டு, ஏப்ரல் 2, இச்சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், திருவழிபாடு நடைபெறும். இதில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் கலந்துகொள்கிறார்.

11 ஆண்டுகளுக்கு முன்னர், இதே ஏப்ரல் 2, சனிக்கிழமையன்று, இறை இரக்கத் திருவிழா திருவிழிப்பு நாளன்று, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவுக்கு அடுத்து வரும் ஞாயிறை, இறை இரக்க ஞாயிறாக அறிவித்தவரும் இத்திருத்தந்தையேயாவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.