2016-03-29 14:56:00

இறைவனின் வல்லமை என்பது அன்பு, அவரின் நீதி என்பது இரக்கம்


மார்ச்,29,2016. இறைவனின் வல்லமை அன்பிலும், அவரின் நீதி இரக்கத்திலும் வெளிப்படுத்தப்படுகின்றது என்பதை மையமாக வைத்து இச்செவ்வாய்க்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனின் உண்மை முகத்தை நமக்கு வெளிப்படுத்துகிறார் இயேசு. இறைவனைப் பொருத்தவரையில், உண்மை வல்லமை என்பது, அழிவில் அல்ல, மாறாக, அன்பிலும், நீதி என்பது பழிவாங்கலில் அல்ல, மாறாக,  இரக்கத்திலும் வெளிப்படுத்தப்படுகின்றது என்கிறது, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.

மேலும், இத்திங்களன்று திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தி, ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்துவைத் தாங்கிச் செல்பவராகச் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கிறது.

ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்தோபர், அதாவது, கிறிஸ்துவை எடுத்துச் செல்பவர் என்று கூறியுள்ளார் திருத்தந்தை. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.