2016-03-25 12:39:00

இது இரக்கத்தின் காலம்..... - செய்த தர்மங்கள் நினைவிலில்லை


தன்னிடம் வந்து கேட்பவர்களுக்கெல்லாம் உதவி செய்தே ஏழையாகிப்போன ஒரு மனிதரிடம்  பத்திரிகையாளர் ஒருவர், ‘உங்கள் வாழ்க்கையில் இதுவரை எத்தனை ஆயிரம் பேருக்கு நீங்கள் உதவிச் செய்திருப்பீர்கள்' என்று கேட்டார். ‘யாருக்குக் கொடுத்தோம், எத்தனை பேருக்குக் கொடுத்தோம் என எண்ணியதில்லை. சிலவேளைகளில், எதற்காகக் கொடுத்தோம் என்று கூட எண்ணியதில்லை. இறைவன் எனக்குக் கொடுத்தபோது, அளந்து கொடுக்கவில்லை. அதைத்தான் நானும் செய்தேன். இப்போதுகூட எனக்குத் தேவையான அளவு அவன் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறான். எனக்குள்ள ஒரே கவலை, இறைவனிடமிருந்து வாங்கி, மற்றவர்களுக்குக் கொடுக்கும் கருவியாக செயல்பட முடியவில்லையே என்பதுதான்’ என்று பதில் சொன்னார் ஏழையாய் நின்ற அந்த செல்வந்தர்.. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.