2016-03-22 16:17:00

புனித வாரத்தில் திருப்பயண ஆலயங்களைத் தரிசிக்க வேண்டுகோள்


மார்ச்,22,2016. இரக்கத்தின் பயணத்தை நடைமுறை அளவில் தொடங்குவதன் ஓர் அடையாளமாக, விசுவாசிகள், புனித வாரத்தில் திருப்பயண ஆலயங்களைத் தரிசிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார் பிலிப்பைன்ஸ் கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே.

ஒவ்வொரு திருப்பயண ஆலயத்தையும் தரிசித்த பின்னர், அத்திருப்பயணத்தில் இரக்கத்தின் பணிகளை ஆற்ற வேண்டும் என்றும், விசுவாசிகளின் செயல்களும், எண்ணங்களும், வாழும்முறையும் இரக்கத்தின் தூய்மைத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் பிலிப்பைன்ஸ் மக்களைக் கேட்டுள்ளார் மனிலா கர்தினால் தாக்லே.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏராளமான கத்தோலிக்கர், புனித வாரத்தில், எட்டு முதல் பதினான்கு ஆலயங்களைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.   அச்சமயத்தில் திருப்பயணிகளுக்குத் திருப்பயணக் கடவுச்சீட்டும் வழங்கப்படுகின்றது. ஐந்தாவது திருப்பயண ஆலயத்தைத் தரிசித்த பின்னர், திருப்பயணிக்கு ஒரு சான்றிதழும் வழங்கப்படுகின்றது.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், மனிலா உயர்மறைமாவட்டத்தில் ஐந்து யூபிலி ஆலயங்கள் குறிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.